×

கோவில்பட்டி அருகே ஊராட்சி தலைவர் கொலையில் பாஜ நிர்வாகி உள்பட 2 பேர் கைது

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் ஊராட்சி தலைவர் பொன்ராஜ் (65). நேற்று முன்தினம் மதியம் விஜயாபுரி சாலையில் உள்ள தோட்டத்தில் இருந்தபோது மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், கொலையாளிகள் கோவில்பட்டி வடக்கு ஒன்றிய பாஜ இளைஞரணி தலைவர் கார்த்திக் (33) மற்றும் 18 வயது சிறுவன் என தெரிய வந்தது.

இருவரும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். கார்த்திக் அளித்துள்ள வாக்குமூலத்தில், தெற்கு திட்டங்குளத்தில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளதை திறக்க வேண்டும், திட்டங்குளம் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எனது லெட்டர் பேடில் மனுவாக எழுதி, 18 வயது சிறுவனுடன் அவரை சந்திக்க தோட்டத்திற்கு சென்றேன்.

 அவரிடம் மனுவில் கையெழுத்து கேட்டதற்கு மறுத்ததோடு, எங்களை அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவரை வெட்டிக் கொன்றேன் என கூறியதாக ேபாலீசார் தெரிவித்தனர்.


Tags : BJP ,Kovilpatti , Kovilpatti, panchayat leader killed, BJP executive arrested
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு