×

திருவள்ளூர் அருகே வேலைக்கு சென்ற மகள் திடீர் மாயம்; போலீசில் தாய் புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் தேவி (39). இவரது கணவர் மாரி. இவர்களது மகள் கீர்த்தனா(21). பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் கடந்த 10 நாட்களாக பூச்சி அத்திப்பேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம்போல் கடந்த இரு தினங்களுக்கு முன் காலை வீட்டிலிருந்த புறப்பட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் வரை கீர்த்தனா வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த தாய் தேவி, கீர்த்தனாவின் தோழிகளிடம் விசாரித்துள்ளார். எங்கும் வராததால் தேவி புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீர்த்தனாவை தேடி வருகின்றனர்.


Tags : Thiruvallur , Daughter who went to work near Tiruvallur suddenly fainted; The mother complained to the police
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...