×

நாகை மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

நாகப்பட்டினம்: நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்தனர். நாகப்பட்டினம் அக்கரைபேட்டையை சேர்ந்த கலையரசன், சஞ்சிக்கண்ணு, ஆனந்த், கமலநாதன், நாகப்பட்டினம் பாப்பா கோவில் பகுதியை சேர்ந்த ராஜா, பூம்புகார் பகுதியை சேர்ந்த ஆகாஷ், ரீகன், பிரவீன் உள்பட 9 பேர் விசைப்படகில் கடந்த 20ம் தேதி இரவு 11 மணிக்கு அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் நேற்று ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், 9 பேரையும் சிறை பிடித்ததோடு, விசைப்படகு மற்றும் மீன்பிடி தளவாடங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 9 பேரையும் திருகோணமலைக்கு அழைத்து சென்றனர்.

Tags : 9 Naga fishermen held captive: Sri Lankan Navy atrocity
× RELATED டாப்சிலிப்பில் கடும் வறட்சி, தீவனம்...