×

தனியார் பள்ளி பஸ்களை டிராக்டரால் மோதி சேதபடுத்திய வாலிபர் நீதிமன்றத்தில் சரண்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மரணத்தையடுத்து, பள்ளி சூறையாடப்பட்டது.  ஜூலை 17ம் தேதி அந்த பள்ளியில் கலவரமாக மாறியது. பள்ளி கலவத்தின்போது டிராக்டர் வண்டியால் பின்புறத்தால் பள்ளி பேருந்தை இடித்து சேதபடுத்திய விவகாரத்தில் அதில் சின்னசேலம் அடுத்த பங்காரம் கிராமத்தை சேர்ந்த ஜெயவேல்(22) என்பவர், பள்ளி பஸ்களை டிராக்டரால் மோதி சேதப்படுத்தியது சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டது. அவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஜெயவேல் கள்ளக்குறிச்சி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஜெயவேலை செப்டம்பர் 5ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி முகமதுஅலி உத்தரவிட்டார். அதன்படி அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Saran , The youth who damaged the private school buses with a tractor will appear in the court
× RELATED அம்பத்தூர் பேருந்து நிலையம் ₹12...