×

வீட்டு காவலில் மெகபூபா முப்தி: டிவிட்டரில் தகவல்

ஸ்ரீநகர்:  தன்னை போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளதாக பிடிபி கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் பதிவிடுகையில்,காஷ்மீரி பண்டிட்டுகளின் அவல நிலையை  மூடி மறைக்க ஒன்றிய அரசு விரும்புகிறது. ஏனெனில் துரதிர்ஷ்டவசமாக அவர்களின்  மோசமான கொள்கைகள் தப்பிச் செல்ல விரும்பாதவர்களை இலக்கு வைத்து கொலை செய்ய  வழிவகுத்தது.

எங்களை பிரதான எதிரியாக முன்னிறுத்துவதற்காகத்தான் நான்  இன்று(நேற்று) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். இன்று சோட்டிகாமில் உள்ள சுனில்  குமாரின் குடும்பத்தைப் பார்க்க நான் எடுத்த முயற்சி நிர்வாகத்தால்  முறியடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். குப்கர் பகுதியில் உள்ள தனது வீட்டின் பூட்டிய கதவுகள் மற்றும் வெளியே நிறுத்தப்பட்டுள்ள சிஆர்பிஎப் வாகனத்தின் படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மெகபூபா முப்தி பகிர்ந்துள்ளார்.  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பல நாட்கள் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

Tags : Meghbooba Mufti ,Twitter , Home Guard, Megabooba Mufti, Information on Twitter
× RELATED காஷ்மீர் மக்களின் வலியையும்,...