×

கே.கே.நகரில் கோஷ்டி மோதல்; நாட்டு வெடிகுண்டு வீசியதில் 2 பேர் காயம்: போலீசார் விசாரணை

சென்னை: கே.கே.நகர் பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்தனர். போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர். சென்னை மேற்கு ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி (25), ஜானேஷ்வரன் (20), கோபி (20), பரத் ஆகியோர் நண்பர்கள். அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு தரப்பை சேர்ந்த ராஜா, கேசவன், முரளி, மணி, பிரகாஷ், பிரவின், தண்டபாணி, யோகி உள்பட 20 பேர் நண்பர்களாக உள்ளனர். இரு தரப்பினரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு இரு தரப்பில் இருந்தும் 15 பேர், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அன்று முதல் இரு தரப்பினருக்கும் போஸ்டர் ஒட்டுவது உள்பட பல்வேறு வகைகளில் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி அன்னை சத்யா நகர் 2வது தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அப்போது மேளம் அடித்தபோது திடீரென அந்த இரு தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள், அவர்களை விலக்கி விட்டனர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு இரு தரப்பினரும் அதே பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அப்போது பாலாஜியின் சகோதரர் பரத், மறைத்து வைத்திருந்த நாட்டு வெடி குண்டை எடுத்து எதிர் தரப்பினர் மீது வீசியுள்ளார். அது வெடித்ததில் எதிர்தரப்பை சேர்ந்த 2 பேருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

Tags : KK Nagar , Party Clash in KK Nagar; 2 injured in country bomb: Police investigation
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!