×

பான் இந்தியா கதவை திறந்தவர் ராஜமவுலி மணிரத்னம் புகழாரம்

சென்னை: பான் இந்தியா கதவை திறந்து வைத்தவர் ராஜமவுலி என மணிரத்னம் கூறினார். பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, மணிரத்னம் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது மணிரத்னம் பேசும்போது,‘பொன்னியின் செல்வன் தெலுங்கு பதிப்புக்காக சிரஞ்சீவிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அது ஏன் என்பது படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும். அதேபோல் நான் நன்றி சொல்ல விரும்பும் மற்றொரு கலைஞன் ராஜமவுலி.

பாகுபலி படம் மூலம் பான் இந்தியா என்ற கதவை திறந்து வைத்து, உலகளவில் தென்னிந்திய சினிமாவுக்கான வியாபாரத்தை பெருக்கியவர். அவரது பங்களிப்பு மிகவும் போற்றத் தகுந்தது. பொன்னியின் செல்வன் 2 பாகமாக உருவாகியுள்ளது. இரண்டு பாகத்துக்கும் கடுமையான உழைப்பை நடிகர், நடிகைகளும் டெக்னீஷியன்களும் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் பேசுவதை விட இந்த படம் அதிகமாக பேச வேண்டும் என விரும்புகிறோம்’என்றார்.

Tags : Rajamouli Mani Ratnam ,Pan India , It was Rajamouli Mani Ratnam who opened the door to Pan India
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்