×

லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் முடிந்தது

லக்கிம்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் கடந்தாண்டு நடந்த வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது, ஒன்றிய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் கார் மோதி, 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

இந்த விவசாயிகளுக்கு நீதி கேட்டும், மிஸ்ராவை ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும்படி வலியுறுத்தியும், லக்கிம்பூரில், ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத்  தலைமையில் கடந்த புதன்று விவசாயிகள் 3 நாள் தொடர் போராட்டத்தை தொடங்கினர். இவர்களுடன் பேசிய நடத்திய அதிகாரிகள், செப்டம்பர் முதல் வாரத்தில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.


Tags : Lakhimpur , Farmers' protest in Lakhimpur ended
× RELATED அசாமின் அரசியல் வரலாற்றில் அரசியல்...