×

சிவகங்கை அருகே விபத்தில் சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளை அகற்றிய சிறுவனுக்கு பலரும் பாராட்டு

சிவகங்கை: சிவகங்கை விபத்தில் சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளை அகற்றிய சிறுவனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து  வருகின்றனர். சிவகங்கை பேருந்து நிலையம் அருகே அண்மையில் அரசு பேருந்தும், காரும் மோதிக் கொண்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், கண்ணாடித் துண்டுகள் உடைந்து சாலையில் சிதறிக் கிடந்தன. அப்போது அப்பகுதியில் ஊசி, பாசி விற்றுக் கொண்டிருந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சிறுவன் அருகேயுள்ள கடையில் இருந்த துடப்பத்தை எடுத்து வந்து கண்ணாடி துண்டுகளை கூட்டி சாலையோரம் தள்ளினார்.

இதை பார்த்த சிலர் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். மனிதாபிமானத்தோடு தன் காலில் காலணி இல்லாத நிலையிலும் ஏழைச் சிறுவன் செய்த மனிதநேயச் செயல்பாட்டை பலரும் பாராட்டினர்.

Tags : Sivaganga , Many praise the boy who removed the pieces of glass scattered on the road in an accident near Sivaganga
× RELATED சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!