தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள தெருவில் தார் சாலை அமைத்து தர கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மாரியம்மன் கோவில் அருகே உள்ள பேபி அம்மாள் நகரை சேர்ந்த ரமணா நகர் 4வது தெருவில் சாலை வசதி இல்லாத காரணத்தினால் தார் சாலை அமைத்து தர கோரி பொதுமக்கள் வலியுறுத்தினார்.
நாங்கள் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 10 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பலமுறை கோரிக்கை வைத்தும் இடம் சம்மந்தப்பட்டவர்களிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பகுதியில் சிறிய மழை பெய்தாலே சேறும் சகதியுமாக மாறுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்கின்றார்கள் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படும் நிலைமை உள்ளது. நாங்கள் குடிநீர் மற்றும் அரசு சம்மந்தப்பட்ட அனைத்து வரிகளும் தவறாமல் செலுத்தி வருகிறோம். எனவே இந்த பகுதியில் தார் சாலை அமைக்க துறை சார்ந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.