×

சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழா: 150 வகை நெல்ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன

சீர்காழி: சீர்காழியில் பாரம்பரிய நெல்திருவிழா நேற்று நடந்தது. இதில் 150 வகையான நெல்ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் மறைந்த நெல் ஜெயராமன் நினைவாக மாநில அளவிலான பாரம்பரிய நெல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் 8ம் ஆண்டு விழா சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சிறுதானியங்கள், இயற்கையான பழங்கள் பயன்படுத்தி ரசாயன கலப்படமற்ற ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு வைத்திருந்தனர்.

இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் விரும்பி உண்ண வைத்தது. மேலும் இயற்கை விதைகள், மூலிகைச் செடிகள், இயற்கை உரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இயற்கை மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாரம்பரிய அரிசி வகைகளை பயன்படுத்தி உணவுகள் தயாரித்து வழங்கப்பட்டன. நெல் திருவிழாவில் முன்னோடி இயற்கை விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Tags : Paddy Festival ,Sirgarhu , Traditional Paddy Festival at Sirkazhi: 150 varieties of paddy were exhibited
× RELATED விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதை...