நாங்குநேரி: ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த 4 பேர் வாகன சோதனையில் சிக்கினர். நாங்குநேரி டோல்கேட் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வந்த இந்த காரில் புதுக்கோட்டையை சேர்ந்த அலாவுதீன் (39) உட்பட 4 பேர் இருந்தனர். அவர்கள் துபாயில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடத்தி வந்த 1 கிலோ தங்கம் சிக்கியது. அலாவுதீன், தனது ஆசன வாய் பகுதியில் தங்கத்தை மறைத்து கடத்தியதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து பாஸ்போர்ட் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளிடம் 4 பேரையும் ஒப்படைத்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.