சென்னை: வடபழனி முருகன் கோயில் வடக்குமாட வீதியை வாகன நிறுத்துமிடமாக பயன்படுவதற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்காலிகமாக பயன்படுத்தவே குத்தகை அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மாநகராட்சியின் விளக்கத்தை ஏற்று முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.