சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெறும் உணவுதிருவிழாவில் பீப் பிரியாணிக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் அனுமதி அளித்துள்ளார். உணவுத்திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி இல்லை என சர்ச்சை எழுந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்தால் அனுமதிக்கப்படும் என மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சுக்குபாய் பிரியாணி உணவகம் அரங்கு அமைக்க முன்வந்ததை அடுத்து பீப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.