×

கருப்பு சட்டை அணிந்த பெரியார் மக்களின் நம்பிக்கையை பெற்றார்: மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். தந்தை ஈ.வெ.ரா. பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் (சனாதனவாதிகளைத் தவிர) என்பதை நாடறியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Periyar ,Modi ,Sidambaram , Black-shirted Periyar won people's trust: P. Chidambaram hits back at Modi
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...