×

ஓபிஎஸ் டிடிவியுடன் இணைந்தால் எங்களுக்கு தொந்தரவு இல்லாமல் போய்விடும்: டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் டிடிவியுடன் இணைந்துவிட்டால் எங்களுக்கு தொந்தரவு இல்லாமல் போய்விடும் என்று ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ்சுடன் இணைய வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் சேர மாட்டேன் என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இப்போது  டிடிவி.தினகரன் கூட்டத்தை கூட்டுவதாக செய்தியை பார்த்தேன். அதில் சிறப்பு அழைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தை அழைப்பார்கள் என்று நினைக்கிறேன்.  

சசிகலாவையும் அழைப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படியே சென்றுவிட்டால் நல்லதுதான். எங்களுக்கு தொந்தரவு தராமல் போய்விட்டால் நல்லதுதான். இப்போது எங்கள் கட்சியை பொறுத்தவரையில் எழுச்சியாக உள்ளது. டிடிவியுடன் சென்று சேர்ந்து விடுங்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். இவ்வாறு கூறினார். மேலும், பீகாரில் நிதிஷ்குமார் விலகியதுபோல அதிமுகவும் பாஜ கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அதை கட்சிதான் முடிவு செய்யும் என்றார்.

Tags : OPS ,DTV ,D. Jayakumar , If OPS merges with DTV, we will be hassle free: D. Jayakumar interview
× RELATED ஓபிஎஸ், டிடிவி உள்பட 5 வேட்பாளர்கள் மீது வழக்கு