×

புதுக்கோட்டை அருகே கண்டுபிடிப்பு கிபி 14ம் நூற்றாண்டு பாண்டியர்களின் கற்றளி, கலை நயமிக்க சிற்பங்கள்

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ரெகுநாதபுரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் கிபி 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிற்கால பாண்டியர்களின் கற்றளி, இடிந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், பிற்கால பாண்டியர்களின் கலைநயமிக்க சிற்பங்கள் கேட்பாரற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கிறது.பேராசிரியர் முத்தழகன் தலைமையில், கீரனூர் முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் புதன்கிழமை மேற்கொண்ட கள ஆய்வில், இந்த பிற்கால பாண்டியர்களின் இடிந்த நிலை கற்றளி அடையாளம் காணப்பட்டுள்ளது.

கலைநயமிக்க சிற்பங்கள், வேலைப்பாடு மிக்க தூண்கள், கல்வெட்டுகளுடன் கூடிய கற்கள் அப்பகுதி முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இந்த பிற்கால பாண்டியர்களின் கற்றளியையாவது, தொல்லியல் துறை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால், கிரானைட் கற்களால் ஆன வேலைப்பாடு மிக்க பழங்கால எச்சங்கள் பாதுகாக்கப்படும். மேலும் கலைநயமிக்க சிற்பங்களை, தொல்லியல்துறை உடனடியாக அப்பகுதியில் இருந்து எடுத்து அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags : Pudukottai ,Cattali , Discovered near Pudukottai, 14th century AD Cattali, artistic sculptures
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி