×

2 ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு விமான கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நீக்கிய ஒன்றிய அரசு: ஆக.31 முதல் அமல்..பயணிகள் கவலை..!!

டெல்லி: விமான பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பான கட்டுப்பாட்டை ஒன்றிய அரசு நீக்க முடிவு செய்துள்ளதால் இனி விமான சேவை நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல கட்டணத்தை நிர்ணயிக்கும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த போது 2020ம் ஆண்டு மே 25ம் தேதி மீண்டும் விமானங்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது பயண நேரத்தின் அடிப்படையில் கட்டணத்தின் மீது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி 40 நிமிடங்களுக்கு குறைவான பயண நேரத்தை கொண்ட உள்நாட்டு சேவையில் குறைந்தபட்சம் 2,900 ரூபாய் முதல் அதிகபட்சம் 8,500 ரூபாய் வரை நிறுவனங்கள் வசூலிக்கலாம். இந்த கட்டண உச்ச வரம்பை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு நீக்கப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 27 மாதங்கள் கழித்து உள்நாட்டு விமான கட்டண நிர்ணயித்தின் மீதான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

தினசரி தேவை, விமான எரிபொருட்களின் விலையை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக உள்நாட்டு விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா விளக்கம் அளித்துள்ளார். இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதை போல், எவ்வித கட்டுப்பாடுமின்றி விமான கட்டணங்கள் உயரும் என்று பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். மறுபுறத்தில் இது பயணிகளை பாதிக்காது என்று விமானத்துறை நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். 


Tags : Government of the Union ,Amal , Domestic Airfare, Ceiling, Union Govt
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...