கேரளா: சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை பிரசாதம் தயாரிப்பதற்கான டெண்டரில் குறிப்பிடப்பட்ட சாதி தொடர்பான நிபந்தனை வாபஸ் பெறப்பட்டது. மலையாளி பிராமணர்கள் மட்டுமே உண்ணியப்பம், வெல்ல நெய்வேத்யம், சர்க்கரை பாயசம் தயாரிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அரசு விளம்பரம் சமதர்மத்துக்கு எதிராக உள்ளது என்று கலாச்சார பேரவை தலைவர் சிவன் கண்டித்திருந்தார்.