திருவள்ளூர்: சோழவரம் அருகே விஜயநல்லூரில் லாரி பார்க்கிங் யார்டில் மதன்குமார் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். லாரிகளில் இருந்து இரும்புக் கம்பிகளை ஏற்றி இறக்கி விற்பனை செய்து வந்துள்ளார் மதன் குமார். தொழில் போட்டி காரணமாக மதன்குமார் வெட்டிக் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.