டெல்லி: புதிய மின்சார சட்டத்திருத்த மசோதா விவசாயிகளை பாதிக்கும் வகையில் எதுவும் இல்லை என ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார். மின்சார சட்டத்திருத்த மசோதா மக்களுக்கு ஆதரவாகவும், நமது பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காகவும் உள்ளது. நுகர்வோருக்கு அரசு மானியம், இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கலாம் என அவர் கூறினார்.