சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு வரும் 25ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறும். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற ஆகஸ்ட் 20 தொடங்கி 23 வரை நடைபெறும் என அவர் பேட்டியளித்தார்.