×

பெரியகுளம் அருகே 4 பேர் கைது காரில் 300 கிலோ குட்கா,482 மதுபாட்டில் பறிமுதல்

பெரியகுளம் :  பெரியகுளம் அருகே, காரில் கடத்தி வந்த 300 கிலோ குட்கா மற்றும் 482 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வாகனத்தை வழிமறித்து ேசாதனை செய்தனர். சோதனையில் குட்கா, பான் மசாலா, மதுப்பாட்டில்களை வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த தேனியை சேர்ந்த செல்வராஜை (49) கைது செய்து விசாரித்தனர்.

 இதில், குட்கா, பான்மசாலாவை வியாபாரிகளான திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த ரமேஷ் (38), தினேஷ் (19) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சேர்ந்த பழனியாண்டி (36) ஆகியோருக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. ரமேஷ், தினேஷ், பழனியாண்டி ஆகியோரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 300 கிலோ குட்கா, பான் மசாலா மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான 482 வெளிமாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Periyakulam , Periyakulam: Police seized 300 kg gutka and 482 bottles of liquor smuggled in a car near Periyakulam and arrested 4 persons.
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி