×

விடுதியில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம்: ஊத்தங்கரையில் போலீஸ் குவிப்பு

கிருஷ்ணகிரி: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பரமானந்தல் அடுத்த தொட்டிமடுவு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (45). இவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (17). இவன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதியில் தங்கி ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தான். நேற்று இரவு 9 மணி அளவில் விடுதியில் கேபிள் வயரில் கோபாலகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இதுகுறித்து தகவல் இருந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி மாணவனின் தந்தை ஆனந்தன் ஊத்தங்கரை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சுமித்ரா உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விடுதி வார்டன், சக மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே மாணவனின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுவதால் மருத்துவமனையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : CBCID ,Uthankaram , Hostel, Plus 2 Student Suicide, CBCID Investigation,
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...