திருவனந்தபுரம்: திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது என பினராயி விஜயன் புகழ்ந்துள்ளார். கலைஞரின் வாழ்வும், நினைவும் அரசியலமைப்பை பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும் என பினராயி விஜயன் கூறியுள்ளார். கலைஞரின் நினைவு நாளையொட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டிவிட்டரில் அஞ்சலி செலுத்தினார்.