×

ராஜபாளையம் ராணுவவீரர் உடல் நல்லடக்கம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒடிசா மாநிலம் மல்கானா என்ற இடத்தில் பயிற்சியின்போது உயிரிழந்தார். அவரது உடல் ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (41) ராணுவ வீரர். இவரது மனைவி சண்முகபிரியா. இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டு ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் தற்போது ஒடிசா மாநிலம் மல்கானா என்ற இடத்தில் பணியாற்றி வந்தார்.

நக்சலைட் வேட்டைக்காக பயிற்சியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அவரது உடலை பெங்களுர் கம்பெனி பிஎஸ்எப் இன்ஸ்பெக்டர் தண்டபாணி தலைமையில் 10 துணை ராணுவ வீரர்கள் இன்று ராஜபாளையம் கொண்டு வந்தனர். செந்தில்குமார் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்பு ராணுவ வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு மயானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : Rajapalayam , Rajapalayam Soldiers in good health
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!