×

75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த முதல் நாள் ஒத்திகை: 7 படைப்பிரிவினர் பங்கேற்று அணிவகுப்பு..!!

சென்னை: 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது. 75வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றவுள்ளார். இதற்காக இன்று ராஜாஜி சாலையில் ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கமாண்டோ படை, குதிரை படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படை பிரிவினர் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றுவது, விருதுகள் வழங்குவது போன்றும் ஒத்திகை நடைபெற்றது.

ஒத்திகை நடைபெற்ற நேரத்தில் நேப்பியர் பாலம் முதல் போர் நினைவு சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலை ஆகிய சாலைகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அடுத்த ஒத்திகை நிகழ்ச்சி 11, 13ம் தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : 75th Independence Day ,Rehearsal ,Fort Kottalam, Chennai , 75th Independence Day, Kottayam, First Day Rehearsal
× RELATED திண்டுக்கல்லில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை