×

நடைபயிற்சி சென்ற 4 பேர் கார் மோதி பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த  சின்ன பர்கூரை சேர்ந்தவர் ஜெகதீசன் (38). இவர் நண்பர்களான பாக்கியராஜ்(40),  சுஜித்குமார்(39), கண்டவீரவேல்(35) ஆகியோருடன் நேற்று மாலை 5.30 மணியளவில்  அங்கிநாயனப்பள்ளியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கார் திடீரென இவர்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு, பள்ளத்தில் இறங்கியது. இதில் ஜெகதீசன் உள்பட 4 பேரும் பரிதாபமாக பலியானார்கள். பர்கூர் போலீசார், காரை ஓட்டி வந்த ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த தணிகைமலையை (40) கைது செய்தனர்.

Tags : Walking, killed by a car, accident
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!