×

விமான நிலையத்தில் பரபரப்பு: ரூ.3 கோடி தங்கம் கடத்திய 2 பேர் கைது

சென்னை: துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் (37), ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாதிக்அலி (40) ஆகியோரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அவர்களிடம் இருந்து தங்கபசை 2.98 கிலோ சிக்கியது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.1.38 கோடி. அதேபோல், சென்னை சர்வதேச விமான முனையத்தின் கழிப்பறை அருகே, தங்கப்பசைகள் அடங்கிய 6 பொட்டலங்கள் இருந்தது.அதன் மதிப்பு ரூ.1.63 கோடி. அதன் எடை 3.52 கிலோ. மொத்தம் ரூ.3 கோடி கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தனர்

Tags : Pandemonium at the airport, 2 arrested for smuggling Rs 3 crore gold
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...