×

வேளச்சேரி மயான பூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் பாலகிருஷ்ணாபுரம், பாரதி நார் மயான பூமிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி மயான பூமியில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பாலகிருஷ்ணாபுரம் மற்றும் பாரதி நார் மயான பூமிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், கோட்டம்-172 வேளச்சேரி இந்து மயான பூமியின் மின்சார தகனமேடையினை சிங்கார சென்னை 20 திட்டத்தின் கீழ் நிரவ பெட்ரோலிய தகன மேடையாக மாற்றம் செய்யவும், அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருந்ததாலும் 13.05.2022 முதல் 31.07.2022 வரை மேற்கண்ட மயானபூமி இயங்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது, வேளச்சேரி இந்து மயானபூமியில் LPG தகனமேடை பணி மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், 31.08.2022 வரை மயானபூமி இயங்காது. எனவே பொதுமக்கள் அருகிலுள்ள ஊர்டு-163க்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் மயான பூமி மற்றும் ஊார்டு 17க்குட்பட்ட வேளச்சேரி பாரதி நகர் மயான பூமியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Tags : Chennai Corporation ,Balakrishnapuram ,Bharati Nar ,Mayan ,Velacheri Mayan Earth , Chennai Municipal Corporation has announced to use Balakrishnapuram and Bharati Naar burial grounds as maintenance work is going on at Velachery burial ground.
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...