×

சென்னையில் சிறுமிக்கு பாலியல் சீண்டல் தந்த பூசாரி மீது பொதுமக்கள் தாக்குதல்: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தப்பியோட்டம்..!!!

சென்னை: சென்னை மதுரவாயலில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்று, அடி வாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, தப்பியோடிய பூசாரியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயல் அடுத்த கந்தசாமிநகர், 5வது தெருவைச் சேர்ந்த சந்திரசேகர். இவர் அதே பகுதியை சேர்ந்த அம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். அந்த கோவிலுக்கு தனது 14 வயது மகளுடன் சென்ற பெண்ணிடம் அவரது மகளுக்கு சுற்றிப்போட வேண்டும் என பூசாரி சந்திரசேகர் கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூசாரி வீட்டிற்கு தனது மகளை அழைத்துச் சென்ற பெற்றோர், சிறுமிக்கு சுற்றிப்போட்டு அவரது வீட்டிலேயே தங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது சிறுமியிடம் பூசாரி தவறாக நடப்பதாக வந்த தகவலையடுத்து, சிறுமியின் பெற்றோர் பூசாரி சந்திரசேகரை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த சந்திரசேகர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலிசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பூசாரி சந்திரசேகர், மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுவிட்டதை அடுத்து. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 


Tags : Chennai , Chennai, girl, sexual harassment, priest, public, assault, escape
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...