தூத்துக்குடி: ரூ.2 கோடி மதிப்பிலான சேதுபதி அரசு குடும்பத்தின் பெண் சிலையை சிலை தடுப்பு பிரிவின் மூலம் மீட்கப்பட்டது. 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஐம்பொன் சிலையை சாத்தான்குளம் ஆறுமுகராஜ், குமரவேல் ஆகியோர் விற்க முயன்றுள்ளனர். தனிப்படையினர் சிலை வாங்கும் நபர்களை போல் நாடகமாடி சிலையை பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி உறையூரை சேர்ந்த முஸ்தபா என்பவர் சிலையை விற்க தரகராக செயல்பட்டது அம்பலம் ஆனது.