தஞ்சை; தஞ்சை மாணவி மரண வழக்கில் சிபிஐ விசாரணையின் நிலை என்ன என்பது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்த தமிழக போலீசின் மனு மீதான விசாரணை அக்டோபர் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.