சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மே தினப் பூங்கா அருகே இருசக்கர வாகனத்தில் விற்பனை செய்ய வைத்திருந்த 300 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி அல்ஜ்மீன், அஜித் ஆகியோர் போதை மாத்திரைகளை விற்க முயன்றபோது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரின் வீடுகளில் போலீஸார் சோதனையிட்ட போது மேலும் 300 போதை மாத்திரைகள் சிக்கியுள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர்.