×

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு: நீர்வரத்து வினாடிக்கு 7,200 கன அடியாக அதிகரிப்பு

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.15 அடியாக உயர்ந்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் உபரி நீர் திறக்க தமிழக பொதுபணித்துறை பொறியாளர்கள் தேக்கடியில் இருந்து புறப்பட்டுள்ளனர். ரூல்கர்வ் அட்டவணைப்படி 137.5 அடிக்கு மேல் வரும் நீர் உபரி நீராக வெளியேற்றப்பட வேண்டும். முல்லை பெரியார் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,831 கன அடியில் இருந்து 7,200 கன அடியாக  அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags : Mullai Periyar Dam , Mullai Periyar dam water level rise: Inflow increases to 7,200 cubic feet per second
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...