×

பிணைய பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு ரூ.2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்கள் மற்றும் ரூ.1000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 20 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 8ம் தேதி அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும்  இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் வரும் 8ம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Tags : Tamil Nadu Government , Sale of Bonds by Auction: Tamil Nadu Government Notification
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...