சென்னை: அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என பன்னீர் செல்வம் அறிக்கை விடுத்தார். அரசியல் ரீதியாக யார் தாக்கினாலும் நயத்தக்க நாகரிக மிக்கவர்களாக அதிமுக தொண்டர்கள் நடக்க அவர் வலியுறுத்தினார். மாற்றார் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக அதிமுகவினர் அநாகரிக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என கூறினார்.