×

181 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: தொன்மையான 181க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 35வது வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், சேலம் மாவட்டம், சிவதாரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஆத்தூர் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி முட்டத்துராயப் பெருமாள் திருக்கோயில், கரூர் மாவட்டம், புகளூர் கரியகாளியம்மன் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம், மகாமாரியம்மன் திருக்கோயில், மயிலாடுதுறை மாவட்டம், கள்ளிக்காடு அகத்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், அய்யனார் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், நாராயணம்மாள்புரம், கற்பக விநாயகர் திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம், சாஸ்தா திருக்கோயில் உட்பட 181 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். இதில் வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags : Expert committee approves to start restoration works in 181 temples
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...