×

ராணிப்பேட்டை அருகே கிராமத்தில் திடீரென இறங்கிய ஹெலிகாப்டர்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கிராமத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரால் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், மாந்தாங்கல் கிராமத்தில் திறந்தவெளி சமவெளி பகுதியில் நேற்று பகல் 12 மணியளவில் திடீரென ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கியது. இதை அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். மேலும் பலர் செல்போனில் செல்பி எடுத்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு அந்த ஹெலிகாப்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதுகுறித்து விசாரித்தபோது, ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பேஸ்-3 பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் பெங்களூருவில் உள்ளார். அவர் ஹெலிகாப்டரில் வந்து வேலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் ஹெலிபேடில் தரையிறங்கி, அங்கிருந்து காரில் செல்வது வழக்கம். தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி வழங்காததால், மாந்தாங்கல் கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெயலலிதா, தேர்தல் பிரச்சாரத்திற்காக அமைக்கப்பட்ட ஹெலிபேடில், ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது தெரியவந்தது.

Tags : Ranipet , A helicopter suddenly landed in a village near Ranipet
× RELATED ராணிப்பேட்டையில் வீட்டுக்குள் இருந்த...