×

காசிமேடு கடலில் மூழ்கி மீனவர் பலி

தண்டையார்பேட்டை: ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் காடி அப்பள கொண்டா (44), சென்னை காசிமேட்டில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்துவந்தார். வழக்கம்போல் நேற்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பாரம் 4வது தெருவை சேர்ந்த வினோத் குமார் (21) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் செல்ல ஏற்பாடு செய்துள்ளார். பிறகு விசைப்படகில் காடிஅப்பளகொண்டா ஏறும்போது கடலில் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.

அவரை சக மீனவர்கள் காப்பாற்ற முயன்றபோது அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். மீனவர்கள் அவரை தேடியபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. தகவல் அறிந்ததும் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீனவர்கள் உதவியுடன் உடலை தேடினர். நேற்று காலை காடிஅப்பளகொண்டா உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விசாரணை நடக்கிறது.

Tags : Kasimedu , Fisherman drowned in Kasimedu sea
× RELATED காசிமேடு அருகே மீன் பிடித்தபோது...