சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமையும்பட்சத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 2-ம் தொழிற்புரட்சி ஏற்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க தற்போது 4,000 ஏக்கர் நிலம் தயாராக உள்ளதாக அமைச்சர் கூறினார். விமான நிலையம் அமைக்க இன்னும் 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.