டெல்லி: டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது. சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தங்கள் ஒப்புதல் இல்லாமல் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தை திறக்கக் கூடாது எனவும் அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.