×

மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 6வது சுற்று போட்டிகள் தொடங்கியது: பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 6வது சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது; ரோனக் சத்வானி பங்கேற்றுள்ளார். பொதுப்பிரிவில் இந்திய ஏ அணி உஸ்பேகிஸ்தான் உடன் மோதுகிறது. இந்திய பி அணி அர்மேனியாவையும், இந்திய சி அணி லிதுவேனியாவையும் எதிர்கொள்கின்றன. கார்த்திகேயன் முரளிக்கு பதிலாக அபிஜித் குப்தா இன்று விளையாடுகிறார். மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி ஜார்ஜியாவை சந்திக்கிறது.

இந்திய மகளிர் பி அணி செக் குடியரசையும், சி அணி ஆஸ்திரேலியாவையும் சந்திக்கின்றன. பக்தி குல்கர்னி, சவுமியா சாமிநாதன், பிரத்யுஷா ஆகியோருக்கு இன்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்ட வர்ஷினிக்கு இன்று வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐந்து சுற்றுகளில் முடிவில் பொது பிரிவில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய ஏ அணி 5 சுற்றுகளில் 9 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.


Tags : Chess ,Olympiad series ,Mamallapuram ,Prakhananth , Mamallapuram, Chess Olympiad, 6th round competition
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...