கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். அதனால் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், முதன் முறையாக இன்று அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த பட்டியலில் பாஜகவில் இருந்து மீண்டும் திரிணாமுல் கட்சிக்கு வந்த பாபுல் சுப்ரியோ, தபஸ் ராய், பார்த்தா பவுமிக், சினேசிஸ் சக்ரவர்த்தி, உதயன் குஹா ஆகிய 5 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அவர்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.