×

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் தாசில்தாரை குற்றவாளி என அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் தாசில்தாரை குற்றவாளி என அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுக்கா கடலாடி கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி முருகன் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை 12 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் எனவும் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அப்போதைய பெண் தாசில்தார் லலிதா என்பவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கு இன்று தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற உத்தரவை கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக அமல்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாத சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு சிறைத்தண்டனை விதிப்பதாக தெரிவித்தனர்.

இந்த உத்தரவை 2 நாட்களில் அமல்படுத்தப்போவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தண்டனை விவரங்கள் அறிவிப்பதற்காக ஆகஸ்ட் 5ம் தேதி நேரில் ஆஜராகும்படி தாசில்தாருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. 2018ம் ஆண்டு முதல் ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுதான் ஆரம்பம் எனவும், நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.


Tags : Chennai High Court ,Dasildar , Contempt of Court, Female Tahsildar, Offender, Chennai High Court
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...