×

கொடைரோடு அருகே வீடு, தோட்டத்தில் பதுக்கிய 2,700 மது பாட்டில்கள் பறிமுதல் : பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை

நிலக்கோட்டை :  கொடைரோடு அருகே வீடு, தோட்டத்தில் விற்பனைக்காக பதுக்கிய 2,700 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஜெ.மெட்டூரை சேர்ந்தவர் காசிமாயன் (45). இவர் தனது வீடு, தோட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வருவதாக  மாவட்ட எஸ்பிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று எஸ்பி தனிப்படை போலீசார் ஜெ.மெட்டூரில் உள்ள காசிமாயன் வீட்டை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது காசிமாயன் விற்பனைக்காக வீடு, தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2,700 மதுபாட்டில்கள், ஆட்டோவை பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்தில் எஸ்பி பாஸ்கரன் விசாரணை நடத்தினார்.

 இதுதொடர்பாக போலீசார், ஆட்டோ டிரைவர் கதிர்வேல் (25), காசிமாயன் மனைவி தீபா (40) ஆகியோரை விசாரணைக்காக அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் அழைத்து சென்றனர். தப்பி ஓடிய காசிமாயனை வலை வீசி தேடி வருகின்றனர்.

போலி மது விற்பனையா?

காசிமாயன் வீடு, தோட்டத்தில் பறிமுதல் செய்த 2,700 மது பாட்டில்களில், 200 பாட்டிலில் அரசு ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் இருந்தது. இதனால் அது போலி மதுவா எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kodairod , Kodai Road, liquor bottles, Seize, Dindigul
× RELATED கொடைரோடு அருகே நாய் கடித்து