திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. மழை காரணமாக பக்தர்கள் பம்பை ஆறு, நீலி மலை வழி பாதையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ள பெருக்கு மற்றும் மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.