×

நிர்மலா சீதாராமன் முதலைக்கண்ணீர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் : சபாநாயகருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி!!

டெல்லி : ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலைக்கண்ணீர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என சபாநாயகர் ஓம் பிர்லாவை டேக் செய்து  மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக இரு அவைகளிலும் எம்பிக்கள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டது. ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், நாடகம், கபட நாடகம், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், முதலைக் கண்ணீர் உள்ளிட்ட வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக அதில் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு பற்றி விவாதம் நடந்தது. அப்போது தமிழில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்காதது முதலைக் கண்ணீர் வடித்த கதை. என்று பேசியிருந்தார்.முதலைக் கண்ணீர் என்ற வார்த்தை தடை செய்யப்பட்டிருந்த நிலையில் அதை ஒன்றிய அமைச்சரே பேசியிருக்கிறாரே என்று சுட்டிக் மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- “ முதலைக்கண்ணீர்” என்ற சொல் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று பேசிய நிர்மலா சீதாராமன் இந்த சொல்லை அழுத்தந்திருத்தமாக பயன்படுத்தினார். என்ன செய்யப்போகிறீர்கள்  சபாநாயகர் ஓம்  பிர்லாவை டேக் செய்து என சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Nirmala Sitharaman ,Venkatesan , Nirmala Sitharaman, Crocodile Kannir, M.P. S. Venkatesan
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...