சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரும் மாற்று இடத்தை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்துக்கு பதில் மாற்று இடம் தர அனுமதி கோரி மே மாதம் அரசுக்கு விண்ணப்பித்ததாக சாஸ்த்ரா தகவல் தெரிவித்துள்ளது. சாஸ்த்ரா பல்கலைக்கழக விண்ணப்பத்துக்கு 3 நாட்களுக்குள் பதில் தருமாறு தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.