ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் இன்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை விசைப்படகுகளுக்கு மீன்படி அனுமதி சீட்டு வழங்கப்படாது என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலத்த காற்று வீசும் என்பதால் ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.